சரியும் வேலைவாய்ப்பு.. 2023ல் TCS, Infosys, HCL நிறுவனங்களில் பணியமர்த்தல் கூடுமா? நிபுணர்களின் கணிப்பு இதுதான்!
நாட்டில் TCS, Infosys, HCL உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தலை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து குறைத்துள்ளன. இனி வரும் காலங்களிலும் பணியமர்த்தல் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
பணியமர்த்தல்:
நாட்டில் பொருளாதார மந்த நிலை காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தலை வெகுவாக குறைத்தன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கமும் செய்து வந்தனர். இதில் இந்த பணி நீக்கத்தை TCS, Infosys, HCL ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன. அதன்படி TCS நிறுவனத்தில் 2வது காலாண்டில் 9840 பேரையும் , 3வது காலாண்டில் 7000 பேரையும் பணியமர்த்தியது. அத்துடன் Infosys நிறுவனமும் 2 மற்றும் 3ம் காலாண்டில் முறையே 10,032 மற்றும் 6000 பேரை பணியமர்த்தியது.
HCL நிறுவனமும் 2வது காலாண்டில் 2500 பேர் மற்றும் 3ம் காலாண்டில் 5892 பேரை பணியமர்த்தியுள்ளது. மேலும் ஐடி நிறுவனங்களின் பெஞ்ச் ஊழியர்களை தக்க வைத்து கொண்டதே இந்த பணியமர்த்தல் குறைப்பிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் TCS, Infosys, HCL உள்ளிட்ட நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதம் கணிசமாக குறைந்துள்ளதும் பணியமர்த்தல் குறைப்புக்கு காரணமாகும்.
இது போன்று வரும் காலாண்டிலும் குறைவான அளவு பணியமர்த்தல் தொடரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் கிளவுட் சேவையில் மாற்றம் இருக்கக்கூடும் என்பதால் இது பணியமர்த்தலை அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.