அதி வேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று, பெரும்பாலான நாடுகளில் ஆதிக்கம் – WHO எச்சரிக்கை!
தற்போது 77க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் இன்னும் பெரும்பாலான நாடுகளில் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் தகவல் அளித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ்
உலக நாடுகளுக்கு புதிய சவாலாக மாறி இருக்கும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளை தாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கர்நாடகா மாநிலத்தில் கண்டறியப்பட்ட இவ்வகை ஒமிக்ரான் வைரஸ், தற்போது 61 பேருக்கு உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே இவ்வைரஸ் அதி வேகமாக பரவக்கூடியது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது இந்தியாவில் 3ம் அலையை ஏற்படுத்துமா என்றதொரு கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி விடுமுறை – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்நிலையில் 77 நாடுகளில் இந்த ஒமிக்ரான் வைரஸ் வழக்குகள் பதிவாகி இருந்தாலும், இந்த வைரஸ் தொற்று இன்னும் பல நாடுகளை ஆக்கிரமித்திருக்கும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உண்மை நிலவரம் என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் இன்னும் கண்டறியப்படாவிட்டாலும், இது பல நாடுகளில் இருக்கலாம்.
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு, இதுவரை இல்லாத அளவுக்கு அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஒமிக்ரான் வைரஸை லேசானது என்று நாடுகள் நிராகரிக்கக்கூடாது. தங்கள் சொந்த ஆபத்தில் வைரஸை குறைத்து மதிப்பிடவும் வேண்டாம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரஸ் லேசான நோயை ஏற்படுத்துவதாக மக்கள் கருதுவது தவறு என்றும், ஆயத்தமில்லாத சுகாதார அமைப்புகளை இது அமிழ்த்தி விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
இதற்கிடையில் பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களை குறித்து பேசிய டெட்ரோஸ், ஒமிக்ரானின் தோற்றம் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இருந்தாலும் பூஸ்டர்கள் ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக ஒரு முக்கிய பங்கை வகிக்கக்கூடும். குறிப்பாக கடுமையான நோய் இறப்பு அபாயத்தில் உள்ளவர்களுக்கு இது உபயோகப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக WHO கூறியது.
அந்த வகையில் புதிய கொரோனா மாறுபாடான ஒமிக்ரானின் அம்சங்களை உலக சுகாதார நிறுவனம் (WHO) கடந்த வாரம் வெளியிட்டுள்ளதால், அது எந்த அளவிற்குப் பரவும் என்பதும், இந்த புதிய மாறுபாடு தொற்றுநோயின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் மற்ற கொரோனா வைரஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரஸின் சரியான அதிகரிப்பு விகிதத்தைக் கணக்கிடுவது கடினம் என்றும் WHO அறிக்கை கூறுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்