பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் காதலி யார் தெரியுமா? அமிர்தா பற்றி ரசிகர்கள் அறியாத தகவல்கள்!
விஜய் டிவியில் தற்போது டாப் மோஸ்ட் சீரியலில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியாவின் இரண்டாவது மகனான எழில் அவர்களின் காதலியாக நடித்து வரும் அமிர்தா குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
எழில் காதலி அமிர்தா:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இத்தொடரின் கதை இல்லத்தரசியான பாக்கியாவை வீட்டில் உள்ள கணவன்,பிள்ளைகள்,மாமியார் அனைவரும் எவ்விதமாக மதிக்கிறார்கள் ,அவமதிக்கிறார்கள் என்பதையும், அவரது பொறுப்புகள் என்னென்ன என்பதை மிகவும் அழகாக ஒளிபரப்பாக்கி வருகிறது. இதில் பாக்கியாவுக்கு இரண்டு மகன்கள் அதாவது மூத்த மகன் செழியன் மாற்றும் இளைய மகன் எழில் இருவரில் எழில் அம்மா மீது மிகவும் பாசமுள்ள மகன் ஆவார்.
இவ்வாறு பாசமுள்ள மகன் கதையில் ஒரு பெண் என்ட்ரி கொடுத்தவர் தான் அமிர்தா. இவர் மீது காதல் கொண்ட எழில் ஐ லவ் யூ என்று சொன்ன போதும் கூட அமிர்தா அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் திருமணமாகி குழந்தையை கொண்டுள்ள தாய் என்ற காரணத்தால் மட்டுமே. ஆனாலும் எழிலுக்கு எல்லாம் தெரிந்தும் அமிர்தா மீது கொண்ட காதல் நாளுக்கு நாள் அதிகமாகியதே தவிர அன்பு மட்டும் குறையவில்லை. இவ்வாறு அழகான கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிர்தா வேற யாரும் இல்லை நாம் அனைவரும் அறிந்த குக் வித் கோமாளி சீசன் 2 ரித்திகா. இவர் சமையலால் மக்கள் மனதில் நின்றாரோ இல்லையோ பாலா,ரித்திகா காம்போவில் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – நேர மாற்றம் அறிவிப்பு!
மேலும் இவர் கோயம்புத்தூரில் பிறந்து தமிழ் சினிமா உலகில் ராஜா ராணி சீரியல் மூலமாக கால் தடம் பதித்தவர். அதை தொடர்ந்து சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமகள் சீரியலிலும் நடித்து வந்தார். அவ்வரிசையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் காதலியாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்,காமெடி ராஜா கலக்கல் ராணி, முரட்டு சிங்கிள் ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.