வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக வரும் புதிய கதாபாத்திரம் யார்? பாரதி கண்ணம்மா புதிய ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து கதையில் புதிய புதிய சம்பவங்கள் நடந்து வந்தாலும், கதையில் எதுவும் சுவாரஸ்யம் இருப்பதாக தோன்றவில்லை. ரசிகர்கள் அதிருப்தி நிலையை அடைந்து விட்டாலும், எப்போது தான் பாரதியும், கண்ணம்மாவும் சேருவார்கள் என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் உண்மைகளை தாண்டி பல வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது. இதனால் ரசிகர்கள் கதையின் முடிவை சீக்கிரம் காட்டுங்கள் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளார்கள். கதையில் சுவாரஸ்யம் குறைந்து வருவதை உணர்ந்த சீரியல் தரப்பினரும் புதிது புதிதாக ஏதாவது மாற்றங்களை செய்து வருகின்றனர். பாரதியும், கண்ணம்மாவும் சேர வேண்டும் என்று பலரும் முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் குழந்தைகள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
லட்சுமி தனது அப்பா பாரதி தான் என்பதை தெரிந்து கொண்டு அவர்களை சேர்க்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் ஹேமா உண்மை எதையும் தெரியாமலேயே சமையல் அம்மா தனக்கு அம்மாவாக வர வேண்டும் என்று ஆசை படுகிறார். இவர்களின் ஆசை பாரதி மற்றும் கண்ணம்மாவை ஒரு பக்கம் ஆச்சர்யப்படுத்தினாலும், மறுபக்கம் சங்கடப்படவும் வைக்கிறது. இவர்களுடன் வெண்பாவின் அம்மா சர்மிளாவும் வெண்பாவை பாரதியின் வாழ்க்கையில் இருந்து பிரித்து, கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.
ஆனால் வெண்பா வரும் மாப்பிள்ளை அனைவரையும் எதாவது கலாட்டா செய்து ஓட விடுகிறார். இதனை அறிந்து கொண்ட சர்மிளா வெண்பாவை அடக்கும் படியான மாப்பிள்ளை ஒருவரை தேடி கண்டு பிடிக்கிறார். ரோஹித் என்ற பெயரில் வெண்பாவின் மாப்பிளையை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். இதனால் கதையில் ஏதாவது மாற்றம் நிகழுமா? வெண்பா பாரதி மற்றும் கண்ணம்மாவின் வாழ்க்கையை விட்டு விலகுவாரா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.