கொரோனா தொற்று முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் – உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!!
உலகம் முழுவதும் உள்ள மக்களை துன்புறுத்தி வருகிறது கொரோனா நோய்த்தொற்று. இந்த பாதிப்பு விரைவாக முடிவுக்கு வராது என்றும் அதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும் உலக சுகாதார மையம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார மையம்:
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய் பரவல் மிக தீவிரமான நிலையில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள், சுகாதார அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். கொரோனா 2வது அலை தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில உலக நாடுகளில் உருமாறிய கொரோனா உள்ளிட்ட பலவகையான கொரோனா நோய்த்தொற்று பரவி வருகிறது.
அண்ணா பல்கலையில் தீவிரமாக பரவும் கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
தற்போது இது குறித்து ஓர் அதிர்ச்சிகரமான தகவலை உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கூறியதாவது, உலக நாடுகளில் பொருளாதாரம் மீண்டும் சீரான நிலைக்கு திரும்ப வேண்டும். மேலும் தொழில்கள், போக்குவரத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முன்பை போல் நடைமுறைக்கு வர வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது கொரோனா வேகமாக பரவுவதற்கு மக்களே காரணம்.
TN Job “FB Group” Join Now
அவர்கள் அலட்சியமாக இருந்ததால் தான் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நம்மால் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும். ஆனால் கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், மேலும் பல சிகிச்சை சிக்கல்கள் உள்ளது. இதனால் கொரோனா தொற்று முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகும். ஆனால் இதனை நம்மால் முற்றிலும் ஒழிக்க முடியும். கொரோனா பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – மத்திய அரசு எச்சரிக்கை!!
உலகம் முழுவதும் தற்போது வரை சுமார் 78 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல வகையான கொரோனா தொற்று பரவுவதால் தான் உலகில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது.