தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் யாருக்கு கிடைக்கும் – அரசாணை வெளியீடு! புதிய நடைமுறைகள் அமல்!

0
தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் யாருக்கு கிடைக்கும் - அரசாணை வெளியீடு! புதிய நடைமுறைகள் அமல்!
தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் யாருக்கு கிடைக்கும் - அரசாணை வெளியீடு! புதிய நடைமுறைகள் அமல்!
தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் யாருக்கு கிடைக்கும் – அரசாணை வெளியீடு! புதிய நடைமுறைகள் அமல்!

தமிழகத்தில் சொத்து மாற்றம், அரசு வேலை, குடும்ப ஓய்வூதியம் பெறுதல் போன்ற வேலைகளின் போது வாரிசு சான்றிதழ் அவசியமாகிறது. இந்த நிலையில் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு வாரிசு சான்றிதழ் வழங்குவதில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

வாரிசு சான்றிதழ்:

ஒரு குடும்ப தலைவர் இறந்த நிலையில் அவரின் சொத்து, பணம் அவர் செய்து கொண்டிருந்த வேலை ஆகியவற்றை பெற வாரிசு சான்றிதழ் கட்டாயமாகும். இறந்த நபரின் வாரிசுகள் உரிய முறையில் அரசிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழை பெறலாம். இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் ஆகியோர் வாரிசு சான்றிதழ் பெறலாம். ஒரு வேளை மகன் இறந்தால் அவரது மருமகள் அல்லது பேரன், பேத்திகள் வாரிசு சான்று பெற்று கொள்ளும் முறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டது.

இதனையடுத்து தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்த அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இனி இறந்த நபரின் மனைவி அல்லது கணவன், மகன் அல்லது மகள் இவர்களுக்கு, மட்டுமே வாரிசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சான்றிதழில், அந்த நபர் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர் வசித்த பகுதியில் உள்ள தாசில்தாரிடம் மட்டுமே வாரிசு சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான வாய்ப்பு – இப்பவே இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!!

Exams Daily Mobile App Download

இனி தாசில்தார் ஒரு வாரத்துக்குள் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் திருமணம் ஆகாத ஒரு நபர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவார்கள். மேலும் வாரிசுதாரர் 18 வயதுக்கு கீழ் இருந்தால் அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதர, சகோதரி வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது ஏதேனும் விவரங்கள் தவறாக இருப்பது கண்டறியப்பட்டால் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!