கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – விரைவில் ஒப்புதல்! WHO இன்று ஆலோசனை!
இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து உலக சுகாதார குழு வல்லுநர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். இதனால் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் வைரஸுக்கு எதிராக செயல்பட்டு தொற்றிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 97% உயிரிழப்பில் இருந்து தடுக்க முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை (அக்.6) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கோவாக்ஸின் தடுப்பூசியை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. அவற்றை உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜை – மஞ்சள் சந்தைக்கு 6 நாட்கள் விடுமுறை!
கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. இதையடுத்து விரைவில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவசர கால பயன்பாட்டுக்கான முறையான அனுமதியை விரைவில் வழங்குவதற்காக வல்லுநர் குழு ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது.