Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH முடிஞ்சுருச்சா, இல்லையா?
ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி செயல்முறைகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், பிரபல தொழில்நுட்ப (IT) நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களை அலுவகம் வரவழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அலுவலகம் வருகை
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதாலும், ஊழியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிவடைய இருப்பதாலும் இன்போசிஸ் நிறுவனம், தனது ஊழியர்களை அலுவலகம் வரவழைக்க ஆலோசித்துள்ளது. இது தொடர்பாக இன்போசிஸ் ஊழியர்களுக்கு ஒரு மெமோ அனுப்பப்பட்டதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் அலுவலகங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டால், இந்நிறுவனத்தில் சுமார் 190 பில்லியன் டாலர் செலவில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஜூலை மாத இறுதியில் மூன்று வங்கி விடுமுறை நாட்கள் – RBI பட்டியல்!
முன்னதாக கொரோனா தொற்று காலத்தில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தன. தற்போது நோய் தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் பல நிறுவனங்கள் ஒரே நேரத்தில் அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளன. மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
மேலும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் எடுத்துள்ளனர். அலுவலகங்களை மீண்டுமாக திறப்பது தொடர்பாக இன்போசிஸ் உறுப்பினர்கள் சிலர் அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஜூலை 26 முதல் 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஆனால் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவது தொடர்பாக இன்போசிஸ் வெளியிட்ட மெமோவில் எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த வாரம் ஜூலை காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்ட இன்போசிஸ், தனது ஊழியர்களில் 99% பேர் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும், வரவிருக்கும் காலாண்டுகளில் ஊழியர்களை அலுவலகம் வரவைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தது. தற்போது வரை இன்போசிஸின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2.67 லட்சமாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.59 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.