தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் விளக்கம்!
தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் விளக்கம்!
தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வருடர்களான மாற்று அறுவை சிகிச்சை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர். அந்த நேரத்தில் நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக பணியாளர்களை நியமித்தது. அத்துடன் மருத்துவ மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கோயம்புத்தூர் மருத்துவமனை வளாகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆய்வு கூட்டம் நடைபெற்றது அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் 2008-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

மதுரையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு

மேலும் தமிழக முதல்வர் உறுப்பு மாற்று சிகிச்சைகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் கொடையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நம் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14 மாதத்தில் மட்டும் 588 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு 34 கோடியே 60 லட்சம் செலவில் கூடுதல் உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 53 லட்சம் செலவில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவசர சிகிச்சை மீட்பு மையம் அமைய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!