TNPSC Group II தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேர்வாணையம் விளக்கம்!
தமிழகத்தில் குரூப் 2, 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது வரைக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் தேர்வு முடிவு குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான விவரங்களை வெளியிட்டிருந்தது. அதாவது, 5413 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2, 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 9.94 லட்சம் பேர் குரூப் 2, 2A தேர்வை எழுதினர். இதனையடுத்து, ஜூன் மாதத்திலேயே குரூப் 2 தேர்விற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால், ஆகஸ்ட் மாதம் வந்த நிலையிலும் கூட தற்போது வரைக்கும் குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கு இடையே குரூப் 2 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதாவது, ஆதிதிராவிடர் (எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர் மற்றும் அனைத்து வகுப்பையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவை சேர்ந்த தேர்வாளர்கள் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்விற்கு முன்னேறிவிடலாம்.
நாட்டில் இதுவரை 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து? மத்திய அரசு அதிரடி!
அதே போல, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தேர்வாளர்கள் 140 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தால் கண்டிப்பாக முதன்மை தேர்விற்கு முன்னேறிவிடலாம். மேலும், இந்த பிரிவை தவிர பிற பிரிவை சேர்ந்தவர்கள் 147 முதல் 150 கேள்விகளுக்கு சரியாக விடையளித்திருக்க வேண்டும். மேலும், இந்த மாதத்திற்குள் கண்டிப்பாக குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என தேர்வாளர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.