TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் விளக்கம்!
TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகளுக்காக தேர்வாளர்கள் பல நாட்களாக காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இந்த மாதத்தில் வெளியாகும் எனவும், முதன்மை எழுத்து தேர்வு எப்போது என்பது குறித்தான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
குரூப் 2, 2A தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 2, குரூப் 4 முதலான தகுதி தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் குரூப் 2, 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதியில் நடைபெற்றது. அதாவது, 5413 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வை கிட்டத்தட்ட 9.94 லட்சம் பேர் எழுதினர். மேலும், தேர்வு முடிந்து பல நாட்கள் ஆகியும் தேர்வு முடிவுகளை வெளியிடாததால் விரைவில் தேர்வுமுடிவுகளை அறிவிக்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது குரூப் 2, 2A தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும், அதற்கான முடிவு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 2023ல் நடைபெறும் எனவும், நேர்முக கலந்தாய்வு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் விடையளித்திருந்தால் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பிரிவினர்கள் 147 முதல் 150 சரியான கேள்விகளுக்கு விடையளித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு காலிப் பணியிடங்களுக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர்களை முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்ய இருக்கின்றனர். இதனால், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள விடைக்குறிப்பை பார்த்து மதிப்பெண்ணை தெரிந்துகொண்டு முதன்மை தேர்வுக்கு உடனடியாக தயாராகும்படி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.