TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? முக்கிய தகவல்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் 21 ம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 2, 2A ன் முதல் நிலைத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் தேர்வு முடிவுகள் குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
TNPSC குரூப் 2:
தமிழகத்தில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2,2A தேர்வு 2 வருடங்களுக்கு பிறகு 2022 மே 21ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 5529 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வழக்கத்தை விட இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு வினாக்கள் மிக எளிமையாக இருந்தது என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இதில் பொது அறிவு பகுதி வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
Exams Daily Mobile App Download
தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து குரூப் 2, 2A முதல் நிலைத் தேர்வின் விடைக்குறிப்பு, கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. மேலும் இத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் TNPSC தேர்வாணையம் தெரிவித்தது. அடுத்த கட்ட முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. அதாவது ஆதிதிராவிடர் பழங்குடியினர் உள்ளிட்ட பிரிவினர், பெண்கள் ஆதரவற்ற விதவைகள் ஆகியோர்கள் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.
TNUSRB பதவிகளுக்கு 3,552 காலிப்பணியிடங்கள் – தேர்வுக்கு தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
அதே போல பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் 140 வினாக்களுக்கு சரியான விடை அளித்திருந்தால் முதன்மை தேர்வை எழுத முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுதிய பல லட்சம் தேர்வர்கள் தேர்வின் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கட் ஆப் மதிப்பெண் தெரிந்தால் முதன்மை தேர்வுக்கு தயாராக முடியும் என்கின்றனர். இந்த நிலையில் உத்தேச விடை குறிப்புகள் மூலம் தங்களின் விடைகளை மதிப்பீடு செய்து முதன்மைத் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் குரூப் 2 , 2A தேர்வு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.