ஆகஸ்ட் மாதம் நீட், ஜேஇஇ தேர்வுகள்? கல்வி நிபுணர்கள் விளக்கம்!!
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ நுழைவு தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வி நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தேசிய நுழைவுத் தேர்வுகள்:
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இறுதி முடிவுகள் வரும் ஜூலை மாதத்திற்குள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் தான் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் சேர்க்கை முறையை பற்றி முடிவு செய்ய முடியும். சிபிஎஸ்இ தேர்வுகளை தொடர்ந்து தேசிய நுழைவு தேர்வுகளும் தள்ளிவைக்கப்படும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இளங்கலை மருத்துவ மற்றும் பல் படிப்புகளுக்கான நீட் 2021 ஆகஸ்ட் 1, 2021 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜே.இ.இ மெயின் 2021 ஐப் பொறுத்தவரை, ஏப்ரல் மற்றும் மே அமர்வுகள் தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.இந்த தேர்வுகள் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்களின் கருத்து:
ஆகஸ்ட் 2021 க்கு முன்னர் JEE, NEET 2021 தேர்வுகள் நடத்தப்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அனைத்து மாநிலங்களின் கருத்துக்களுக்காக மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. எனினும், பெரும்பாலான மாநிலங்கள் சிபிஎஸ்இ ன் முடிவை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமோல் முகர்ஜி, சிபிஎஸ்இ முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் அறிவிக்கப்படும். பல்கலைகள் மாணவர்களின் சேர்க்கை விதிகளை வகுக்கும் நடைமுறையில் ஈடுபடுவதற்கு இந்த காலம் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம், இருசக்கர வாகனம் இலவசம் – அசத்தும் சமூக ஆர்வலர்கள்!!
விகாஸ் குப்தா அவர்கள், தற்போதைய விகிதத்தின் படி, ஜூலை நடுப்பகுதி அல்லது இறுதிக்குள் தொற்று பெரும்பாலும் குறைந்து விடும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை விரைந்து நடத்துவது விவேகமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.