தமிழக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை எப்போது? அமைச்சரின் புதிய விளக்கம்!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி சார்பில் பல முக்கியமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. அதில் ஒன்று தான் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. திமுக கட்சி சார்பில் பெண்களை முன்னேற்றும் வகையில் பல நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டன. இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை என அடுக்கடுக்காக பெண்களுக்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதன் பின் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
Exams Daily Mobile App Download
அவர் அறிவித்தபடி பேருந்துகளில் பெண்களுக்கான இலவச கட்டணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினார். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பின் இந்த திட்டம் அமலுக்கு வரும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து இத்தனை மாதம் ஆன நிலையில் இந்த திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், திமுக கட்சி சார்பில் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களில் முக்கியமான திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து குடும்பத் தலைவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.