தமிழக மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
தமிழக மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழக மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழக மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பள்ளி திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக இயக்கப்படவில்லை. இதையடுத்து தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் ஓமைக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் பள்ளிகள் ஜனவரி மாதம் முழுவதும் மூடப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்த பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி தற்போது அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும்பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக அடுத்த கல்வியாண்டு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பணத்தினை டெபாசிட் செய்ய ஆதார், பான் கார்டு அவசியம்!

இதனை தொடர்ந்து தற்போது இது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் தனது அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான அடுத்த கல்வியாண்டு 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி அன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்று அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!