அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? மாநில அரசு பதில்!

0
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? மாநில அரசு பதில்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? மாநில அரசு பதில்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? மாநில அரசு பதில்!

இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பல மாநில அரசுகள், தங்கள் ஊழியர்களுக்கான DA வை உயர்த்தி அறிவித்த பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அகவிலைப்படி உயர்வு:

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள், அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் இந்த நிலையில், சில மாநிலங்கள் அந்தந்த மாநில அரசு ஊழியர்களுக்கு டிஏவை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த DA உயர்வு, 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், மத்திய அமைச்சரவை இந்த ஆண்டின் இரண்டாம் பாதி DA உயர்வு குறித்த முடிவை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
ஊழியர்களுக்கான DA உயர்வை அறிவித்த மாநிலங்களின் பட்டியல்:

திரிபுரா: கடந்த புதன்கிழமை, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புதல் அளித்தார். இதை மாநில தகவல் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி அறிவித்தார். இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ.523.80 கோடி கூடுதல் சுமையை அரசு சுமக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – முதன்மை தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய பிரதேசம்: கடந்த வாரம், மத்தியப் பிரதேச அரசும் மாநிலத்தில் உள்ள 7.5 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த DA உயர்வு மூலம் கருவூலத்துக்கு ரூ.625 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விவரம் அளித்துள்ளார். கடந்த முறை மாநில அரசு ஒரே நேரத்தில் 11 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியதால், இதுவரை மாநில அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் வரை டிஏ வழங்கப்பட்டு வந்தது.

உத்தரகாண்ட்: மாநில ஊழியர்களுக்கு சுதந்திர தினப் பரிசாக, புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தரகாண்ட் அரசு, கடந்த வாரம் ஜனவரி 1, 2022 முதல் பெருநிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) 3 சதவீதம் உயர்த்தியது. மேலும் மாநில அரசின் இந்த முடிவால் மாநிலத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 45,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். சமீபத்திய உயர்வின் மூலம், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!