மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊழியக்குழுவின்படி வழங்கப்படும் சம்பள உயர்வு குறித்த அடுத்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதாவது ஆண்டிற்கு 2 முறை அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். நாட்டின் விலைவாசி உயர்வை அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலையில் டிஏ உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இம்முறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR 6% அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஏவை அதிகரிக்கும்போது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (ஏஐசிபிஐ) தரவை மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி, DA உயர்த்தப்படும் போது, அகவிலைப்படி 34% லிருந்து 40% ஆக உயரும். ஜனவரி 2020, ஜூன் 2020, ஜனவரி 2021க்கான அகவிலைப்படியானது கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் நிலுவையில் வைக்கப்பட்டது. ஆனால் அவற்றை வழங்க ஊழியர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. நிலுவை தொகை வழங்கப்படமாட்டாது என்று அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது. தற்போதைய தவணைக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் அதனால் ஊழியர்களின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் மற்றம் இருக்கும்.
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (40%) – ரூ.22,760/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) – ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு – 22,760-19,346 = ரூ 3,414/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு – 3,414 X12 = ரூ 40,968
TNCSC தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (40%) – ரூ.7,200/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) – ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு – 7200-6120 = ரூ.1080/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு – 1080 X12 = ரூ 12,960