மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட உள்ள நிலையில் நிலுவை தொகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள்:
இந்தியாவில் மத்திய, மாநில என்னும் இரு வகையான அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு அரசுகளுக்கு கீழ் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசுகளின் மிக பெரிய தூணாக விளங்குவது அரசின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தான். அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளின் பின் அரசு ஊழியர்களின் பங்கு மிக பெரியதாக கருதப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்வு என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியத்துடன் சேர்ந்து வழங்கப்படும் தொகையாகும். நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் 18 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களின் நிலுவை தொகை விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
Exams Daily Mobile App Download
மத்திய அரசு ஊழியர்களில் நிலை-1 பிரிவு ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதேசமயம், லெவல்-13 அல்லது லெவல்-14 ஆகியவற்றுக்கு நிலுவைத் தொகை ரூ.1,44,200 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று பாரதி பென்ஷனர்ஸ் மஞ்ச் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA/DR நிலுவைத் தொகையை நிதியமைச்சகம் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.