தமிழக கல்லூரி மாணவிகளுக்கான 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது? உயர்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பாக கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள், ஆண்டு இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி 2021-2022 கல்வியாண்டில் நடைபெற்றது. மேலும் கடந்த ஜூன் 13ம் தேதி மாநிலத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது. இதையடுத்து கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
Exams Daily Mobile App Download
அதாவது அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பாக, மாணவியரிடம் இருந்து சான்றிதழ்கள், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்டவற்றை பெற கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி, மகளிர் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கலாம் என ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடியில் இட ஒதுக்கீடு? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
மேலும் இந்த ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன் பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன் முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.