PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப்பணம் எப்போது வெளியீடு? முழு விவரம் இதோ!

0
PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப்பணம் எப்போது வெளியீடு? முழு விவரம் இதோ!
PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப்பணம் எப்போது வெளியீடு? முழு விவரம் இதோ!PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப்பணம் எப்போது வெளியீடு? முழு விவரம் இதோ!
PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப்பணம் எப்போது வெளியீடு? முழு விவரம் இதோ!

மத்திய அரசின் PM கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ் 12வது தவணைப் பணம் விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கிசான் நிதிப்பணம்

நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்காக மத்திய அரசாங்கம் PM கிசான் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நிதியுதவியை வழங்கி வருகிறது. அந்த வகையில் தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டு தோறும் ரூ.6000 என்ற அடிப்படையில் ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2000 நிதிப்பணம் வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 11 தவணை நிதிப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப் பணம் வரும் செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

பொதுவாக, PM கிசானின் முதல் தவணைக்கான பணம் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணைப்பணம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது தவணைப்பணம் டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் கொடுக்கப்படும். அந்த வகையில் மே 31 அன்று பிரதமர் நரேந்திர மோடி PM-Kisan திட்டத்தின் 11வது தவணைப்பணமாக 21,000 கோடி ரூபாய் பணத்தை 10 கோடி விவசாயிகளுக்கு அனுப்பியுள்ளார். இதற்கிடையில் 12வது தவணைப்பணத்தை பெறுவதற்கு பயனர்கள் eKYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை  – விண்ணப்பிக்கலாம் வாங்க !

அந்த வகையில் மத்திய அரசு eKYC இணைப்பதற்கான காலக்கெடுவை மே 31 முதல் ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இப்போது OTP அடிப்படையிலான eKYC செயல்முறை PM KISAN போர்ட்டலில் கிடைக்கிறது. மேலும், பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC செயல்முறைக்காக அருகிலுள்ள CSC மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆன்லைனில் eKYC செயல்முறையை மேற்கொள்ள கீழ்காணும் விவரங்களை பின்பற்றும்படி பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • PM-Kisanன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • அங்கு திறக்கும் பக்கத்தில் வலது மூலையில் இருக்கும் eKYC ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு search பாக்ஸை கிளிக் செய்யவும்.
  • அடுத்து ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
  • இறுதியாக ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்து OTPஐ உள்ளிடவும்.
  • இப்போது KYC செயல்முறை முடிவடையும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!