அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? வலுக்கும் போராட்டம்!
அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய அரசு முன்னதாக தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது
பழைய ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் 2004 ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு காலத்தில் எவ்வித பண பலன்களையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அனைத்து மாநில அரசு ஊழியர்களும் எதிர்த்தனர். மேலும் அரசு ஊழியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். அண்மையில் தான் ஜார்கண்ட் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதே போல பஞ்சாபிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் பகவந்த் மான் அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
SBI FD Vs Post Office FD – கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி? முழு விவரம்!
அத்துடன் அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் ஜலந்தரில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோஷமிட்டு வருகின்றனர். மேலும் ஆம் ஆத்மி கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.