தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டின் மொஹரம் பண்டிகை எப்போது? தலைமை காஜி அறிவிப்பு!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான மொஹரம் பண்டிகை இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு மொஹரம் பண்டிகை குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மொஹரம் பண்டிகை:
ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகை தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய ஆண்டின் 4 புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
ரமலானுக்கு அடுத்தபடியாக இந்த பண்டிகை இஸ்லாமிய மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதை துக்க நாளாகவும் அனுசரிக்கின்றனர். சில இஸ்லாமியர்கள் இந்த மாதத்தின் 9 மற்றும் 10ம் நாளிலும் அல்லது 10ம் நாள் மட்டும் உண்ணா நோன்பு இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்படும். இந்த நாளில் புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து உண்ணுவர். மேலும் இந்த நன்னாளில் சமைத்த உணவை ஏழை, எளிய மக்களுக்கும் வழங்குவார்கள்.
கனியாமூர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் துவக்கம் – அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரமலான், பக்ரீத் போன்ற இஸ்லாமிய பண்டிகைகளின் வரிசையில் மொஹரம் பண்டிகையும் ஒன்றாக இருக்கிறது. 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்ததால் சென்ற ஆண்டு மொஹரம் பண்டிகை அன்று பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு நிலைமை சரியானதை அடுத்து மக்கள் தொழுகைக்கு செல்ல காத்துக் கொண்டிருக்கின்றனர்.