தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு 2020-22 ஆம் ஆண்டிற்கான இலவச மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
இலவச மடிக்கணினி:
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி வழங்க வேண்டும் என்பதால் அரசு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி இலவச சீருடை, இலவச மிதிவண்டி என பல பொருள்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 2020-ஆம் ஆண்டில் இலவச மடிக்கணினி வழங்கவில்லை.
தற்போது நிலைமை சரியான பின்னர் கூட இலவச மடிக்கணினி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 2020-21, 2021-22 ஆம் ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச மடி கணினிகள் வழங்கி இருக்க வேண்டும். நடப்பாண்டில் ஐந்தரை லட்சம் பேருக்கு மடிகணினிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்கான பணிகள் கூட நடப்பதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு மடிக்கணினி அவசியமாக இருக்கிறது.
தமிழகத்தில் நாளை (ஆக.17) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!
Exams Daily Mobile App Download
அரசு பள்ளி மாணவர்களால் அதனை விலை கொடுத்து வாங்க முடியாது. அதனால் மாணவர்களுக்கு மடிக்கணினி கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மேலும் மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் அரசு அப்படி எந்த முடிவையும் எடுக்க கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.