தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் பொது கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு:
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவ மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் பொது கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு? ரிசர்வ் வங்கி விளக்கம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 440 க்கு மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஆண்டுதோறும் இளநிலை படிப்பிற்கு 1.5 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும் எனவும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 20 தொடங்கி 23 வரை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்வாகின்றவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதால், பொறியியல் கல்லூரிகளில் நிறைய காலியிடங்கள் உருவாகிறது என்பதற்காகத்தான் கலந்தாய்வு ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வராததால் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.