CTET தேர்வு எப்போது? முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் மத்திய கல்வி வாரியம் ஆண்டுத்தோறும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022ம் அன்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பபதிவுகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
இந்தியாவில் மத்திய கல்வி வாரியம் ஆண்டுதோறும் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 வருடங்களாக நடைபெறவில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இந்த எழுத்து தேர்வானது 2 தாள்களை கொண்டது. அதில் முதல் தாளானது 1 ம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கானது, இரண்டாம் தாள் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கானது ஆகும்.
TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
Exams Daily Mobile App Download
இந்த இரண்டு தேர்விலும் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் முறை, மொழியறிவு, கணிதம், சுற்றுச்சூழல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். தற்போது 2022ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைமுறை இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்