மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு எப்போது? – 7வது ஊதியக் குழு தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு எப்போது? - 7வது ஊதியக் குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு எப்போது? - 7வது ஊதியக் குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு எப்போது? – 7வது ஊதியக் குழு தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் என்று பலரும் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து 7வது ஊதியக் குழு தகவல் ஒன்றை அளித்துள்ளது.

7வது ஊதியக் குழு:

7வது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறிவிக்கப்படும். தற்போது, செப்டம்பரில் 8 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கான இறுதி முடிவுகள் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எடுக்கப்படும். இந்நிலையில், புதன்கிழமையன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது, ஆனால் 7வது ஊதியக் குழு தொடர்பான டிஏ உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த மாத இறுதிக்குள் ஊழியர்களுக்கு டிஏ கிடைத்தால் அது மிகவும் நல்ல அறிவிப்பாக இருக்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், செப்டம்பர் 28 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். அறிவிப்பு வெளியிடப்பட்டால், ஜூலை 2022 முதல் DA வழங்கப்படும். மேலும், 7வது ஊதியக் குழுவை அமைத்த பிறகு, 8வது ஊதியக் குழுவை அரசு அமைக்குமா என்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக, அத்தகைய திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார். குறிப்பாக, DA ஆனது சில்லறை பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இது சில காலமாக 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது. டிஏ 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2021 இல், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் DAவை 17 முதல் 28 சதவீதமாக மத்திய அரசு திருத்தியது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் – தலைவர்கள் இரங்கல்!

2021 அக்டோபரில் DA 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2022 இல், 7வது ஊதியக் குழுவின் கீழ் DA ஐ மேலும் 3 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது, இதன் விளைவாக அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் DA கிடைக்கும். 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படியின் பயனாளிகளாக உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!