மருத்துவத்துறையில் உள்ள காலியிடங்கள் நியமனம் எப்போது? அமைச்சர் அறிவிப்பு!
தமிழக சுகாதாரத்துறையில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், தற்போது தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தகவல்:
தமிழகம் முழுவதும் தற்போது பலவகையான காய்ச்சல்கள் பரவி, மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது ஆரம்பத்தில் சாதாரண அளவிலான எண்ணிக்கையாக இருந்த போது, யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்படி ஒரு சாதனை செஞ்சுருக்கா – ரசிகர்கள் வாழ்த்து மழை!
காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் பள்ளி குழந்தைகளுக்கு உறுதி செய்யப்படுவதால், தமிழகத்தில் மீண்டும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. ஆனால், அந்த அளவிற்கு பாதிப்பு இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தூத்துக்குடியில் செய்தியாள்களை சந்தித்தார்.
Exams Daily Mobile App Download
அப்போது, காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையானது இதற்கு முந்தைய வருடங்களில் இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட எண்ணிக்கையின் அளவில் தான் உள்ளது. மேலும், தமிழக சுகாதாரத்திரையில் உள்ள காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்றும், தற்போது அனைத்து வித மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்