TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவித்தபடி கடந்த மே 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற்றது. இதையடுத்து இத்தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21ம் தேதி அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வை 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான Answer Key வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் தேர்வர்கள் குரூப் 2 தேர்வின் முதன்மை தேர்வுக்கு தயாராவது அல்லது அடுத்து நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கு தயாராவது என்பது குறித்து முடிவு எடுக்க முடியும்.
இந்த நிலையில் இது தொடர்பாக TNPSC தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது, குரூப் 2,2ஏ தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட உள்ளதாக திட்டமிட்டுருப்பதாக அறிவித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டு கட்ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்புக்கும் தேர்வர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் குரூப் 2,2ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.