JEE தேர்வர்களுக்கான முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!
இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜேஇஇ தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதே போலவே இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.
JEE தேர்வு:
இந்தியாவில் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற படிப்புகளில் சேர JEE எனும் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு என 2 கட்டங்களாக நடைபெறும். முதல் நிலை தேர்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த நிலையில் 2022ம் ஆண்டில் இருந்து முதல்நிலை தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேசிய தேர்வு மையம் (NTA) தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 21 ம் தேதி முதல் கட்ட முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அடுத்ததாக கடந்த ஜூலை மாதம் 2ம் கட்ட தேர்வு நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த தேர்வானது நாடு முழுவதும் சுமார் 500 மையங்களிலும், வெளிநாடுகளில் 17 மையங்களிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 6,29,778 பேர் இந்த 2ம் கட்ட நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேர்வின் விடை குறிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து தேர்வர்கள் விடை குறிப்பை அதிகார்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடைகளில் தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சேபனை தெரிவிக்கும் போது ஒவ்வொரு கேள்விக்கும் விண்ணப்பதாரர்கள் 200 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாற்றம் – தேர்வு வாரியம் அறிவிப்பு
JEE முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிகள்:
- முதலில் jeemain.nta.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் முகப்பு பக்கத்தில் JEE Main 2022 Paper 2 Result என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
- இறுதியாக JEE முதன்மை அமர்வு 1 தாள் 2 ன் முடிவுகள் திரையில் காட்டப்படும்.