தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? அரசு விளக்கம்!
மாவட்ட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் வரும் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு கூட்டம் முடிந்த பிறகுதான் தொகுப்பூதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
கலந்தாய்வு கூட்டம்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் இழந்த மாணவர்களின் கல்வி திறனை மீட்டெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் தற்போது வரைக்கும் நிரப்பப்படாமல் உள்ளன. ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை நியமிக்க கால தாமதமாகும் என்பதால் தற்போது தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால், தற்காலிகமாக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் எனவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டைடல் பார்க் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – ஆட்சியர் பேட்டி!
மேலும், இந்த கல்வி ஆண்டில் பொதுமாறுதலுக்காக விண்ணப்பித்திருக்கும் ஆசிரியர்களின் விபரங்களை கொண்டு தான் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இருக்கும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட மாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு அதாவது ஜூலை 8ஆம் தேதிக்கு பிறகுதான் தொகுப்பூதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.