ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – இனி கோதுமை கிடையாது! அதிர்ச்சி தகவல்!
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோதுமை தட்டுப்பாடு காரணமாக உணவு மற்றும் தளவாடத் துறை ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக வினியோகிக்கப்படுகிறது. இதையடுத்து பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற போர்ட்டபிலிட்டி சலானை பெற்று இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
ஏனெனில் பல மாநிலத்தில் கோதுமை கொள்முதல் என்பது குறைந்த அளவே உள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் கோதுமை அளவை குறைத்து அரிசியை விநியோகிக்க திட்டமிட்டனர். இந்த நிலையில் கோதுமையின் தட்டுப்பாடு அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
TN தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
அதன் தொடர்ச்சியாக, உணவு மற்றும் தளவாடத் துறை ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் 3 கிலோ கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும் அதாவது 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இனி கோதுமைக்கு பதிலாக சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் கோதுமை கொள்முதல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த முடிவில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.