கணவருக்காக சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் கேப்ரில்லா செய்த காரியம் – ரசிகர்கள் உருக்கம்!
ஆடைக்கும், நிறத்திற்கும், குணத்திற்கு சம்பந்தம் இல்லை ஆனாலும் மாற கூடாதது குணம் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கும் சின்னத்திரை நடிகை கேப்ரில்லா தற்போது சன் டிவி சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகிவரும் நிலையில் திடீரென தனது கணவர் ஆகாஷ் அவர்களுக்கு மன்னிப்பு கேட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கறுப்பழகி கேப்ரில்லா :
சினி உலகுக்கு நடிப்பை தாண்டி நிறமெல்லாம் ஒரு தடை இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கேப்ரில்லா, அவரது வாழ்க்கையில் பல சிரமங்களை தாண்டி, திறமை ஒன்று இருந்தால் போதும் கண்டிப்பாக வாழ்வு மாறும் என்பதில் உறுதியாக இருந்ததற்கு கிடைத்த வெற்றி தான் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படம். இப்படம் தான் கேப்ரில்லா வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நிறத்தால் பின் தங்காமல் சாதிக்கும் ஒரு பெண்ணாகவும், கிண்டல், கேலிகளின் மத்தியில் அதை கடந்து திறமையான மற்றும் துடிப்பான நடிப்பை கொடுத்து சுந்தரி சீரியலில் சுந்தரியாக நடித்து மக்கள் மனதை அதிகளவில் இடம் பிடித்த பிரபலமாகி வருகிறார்.
Exams Daily Mobile App Download
நிஜ வாழ்க்கையில் கேப்ரில்லா எப்படி துணிகரமான பெண்ணாக பல தடைகளை கடந்து சாதித்து வருகிறோரோ அதே கதைக்களம் தான் இந்த தொடரும். நிறத்தை குறை சொல்லும் மனிதர்கள் மத்தியில் தனது நிறத்தால் பல படவாய்ப்புகளையும், சமீபத்தில் ஏ.ஆர் ரகுமானின் மூப்பில்லா தமிழ் தாயே பாடலிலும் சில வரிகளை பாடிய வாய்ப்புகளையும், தற்போது டிவி சீரியல் டி.ஆர்.பியில் 2வது இடத்தை இவர் நடிக்கும் சுந்தரி சீரியல் இடம் பெற்று வரும் அளவுக்கு தனது நடிப்பால் நிறம் ஒரு தடை இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சுந்தரி கேப்ரில்லா தனது கணவரிடம் பகிரங்கமாக இன்ஸ்டாவில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
“பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகரின் அம்மா மருத்துவமனையில் அனுமதி – அவரே வெளியிட்ட பதிவு!
ஏன்னென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த சன் விருது விழாவில் கேப்ரில்லா செல்லஸூக்கு பேவரைட் ஹீரோயின் கேட்டகிரியில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது மேடையில் தனது அம்மா மற்றும் அம்மாச்சி பற்றி கேப்ரில்லா பேசி இருக்கிறார். ஆனால் தனது காதல் கணவரை பற்றி பதற்றத்தில் பேச மறந்துவிட்டார். அதனால் அவரது இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் கேப்சன் ஆக மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்க்கு ஆகாஷ் அவர்கள் ”உண்மையை தானா சொல்ல முடியும், அம்மா அம்மாச்சி பற்றி பேசியது சரியே” என்கிறார். அதற்கு கேப்ரில்லா, ”நீ தான் என் வாழ்நாள் விருது” என கூறி காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.