கோபியுடன் பழகும் பெண்ணை கண்டுபிடித்த எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை பற்றிய உண்மைகள் எல்லாமே எழிலிற்கு தெரிந்தாலும் ஆனாலும் அந்த பெண் யார் என்பது எழிலிற்கு தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் எழிலிற்கு உண்மை எல்லாம் தெரிய வர கோபியிடம் அது பற்றி கேட்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பெரிய திருப்பங்கள் வரவில்லை. இருந்தாலும் கோபி மாட்டிக் கொண்ட பின் தான் சுவாரஸ்யம் எல்லாம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பலர் கோபி எப்போது சிக்குவார் என எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் எழில் படம் எடுக்க அதை குடும்பத்தில் அனைவரும் வந்து பார்க்கின்றனர். ஆனால் கோபி வர வேண்டாம் என எழில் சொல்ல அவர் வராமல் இருக்கிறார். பாக்கியாவும் ஈஸ்வரியும் எழில் வராததை நினைத்து வருத்தப்பட கோபி எழில் சொன்னதை சொல்லிவிடுகிறார்.
முதன்முறையாக தனது தம்பியை பார்த்த ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
அடுத்ததாக அமிர்தாவிற்கு எழில் மீது காதல் வருகிறது. ஆனால் இன்னும் அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இந்நிலையில் இனி வரப் போகும் எபிசோடுகளில் அமிர்தாவும் எழிலும் வெளியே சாப்பிட செல்ல அங்கே அந்த ரவுடிகள் மீண்டும் வருகின்றனர். அப்போது அவர்கள் கழுத்தில் தாலி இல்லை புருஷன் என சொல்கிறாய் என கேட்டு சண்டை போட அப்போது அமிர்தா இவர் என் கணவர் தான் என சொல்கிறார். அதை கேட்டு எழில் சந்தோசப்படுகிறார்.
அந்த நேரம் பார்த்து அங்கே கோபியும் ராதிகாவும் ஒன்றாக வருகின்றனர். கோபி பழகுவது ராதிகா தான் என தெரிந்து எழில் அதிர்ச்சி அடைகிறார். கோபியிடம் இது பற்றி கேட்கலாம் என சொல்ல எழில் அவரிடம் கேட்க செல்கிறார். அதற்கு கோபி நான் அப்படி தான் பழகுவேன் அதனால் என்ன செய்ய முடியும் என கேட்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த எழில் கோவமாக சென்று ராதிகாவிடம் உண்மையை கேட்பாரா என்பது பற்றி எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.