“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை விஜே சித்ராவை பதிவு திருமணம் செய்ய காரணம் என்ன? உண்மையை சொன்ன கணவர் ஹேமந்த்!
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜே சித்ரா. அவருடைய இறப்பில் பல மர்மங்கள் இருக்கும் நிலையில் சித்ராவை ரகசிய திருமணம் செய்து கொள்ள என்ன காரணம் என அவருடைய கணவர் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடக்கத்தில் சற்று பின்னடைவை கண்டாலும், கதிர் முல்லையின் கெமிஸ்ட்ரியால் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீரியலுக்கு வந்தார்கள். முல்லையாக நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் சீரியலில் வருவதற்கு முன்னதாக விஜேவாக பல சேனல்களில் வேலை செய்திருக்கிறார். தன்னுடைய திறமையால் தமிழக மக்களின் செல்ல பிள்ளையாக இருந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
Exams Daily Mobile App Download
அவருடைய இறப்பிற்கு என்ன காரணம் என சரியாக தெரியவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு அவருடைய கணவர் ஹேமந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ஹேமந்த் சந்தேகத்தால் சித்ரா இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 வருடங்கள் ஆன நிலையில் அவருடைய கணவர் ஹேமந்த் சித்ராவின் மறைவிற்கு பல அரசியல் மாஃபியாக்கள் காரணம் என சொல்லி இருக்கிறார். மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
கோபிக்கு வந்த ராதிகா போன் அழைப்பை எடுத்து பேசிய பாக்கியா – இனி சிக்குவாரா? இன்றைய எபிசோட்!
இந்நிலையில் சித்ராவிற்கும் ஹேமந்த்திற்கும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர்களுக்கு பதிவு திருமணம் நடைபெற்றது. அதற்கு என்ன காரணம் என ஹேமந்த் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவரது அம்மா அப்பா பணம் இல்லை என்பதால் திருமணத்தை தள்ளி போட்டுக் கொண்டே இருந்ததாகவும் அதனால் தான் பதிவு திருமணம் செய்ததாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.