தமிழகத்தில் பொங்கலுக்கு பின் ஸ்பெஷல் ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் பொங்கலுக்கு பின் ஸ்பெஷல் ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பொங்கலுக்கு பின் ஸ்பெஷல் ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பொங்கலுக்கு பின் ஸ்பெஷல் ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள்! அரசின் முடிவு என்ன?

பொங்கல் பண்டிகை முடியவுள்ள நிலையில் முதல்வர் வரும் வாரம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதையடுத்து விரைவில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்து வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் மீண்டும் தடுப்பு பணியாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் பொது இடங்களில் செல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவுடன் முதல்வர் அவர்கள் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பென்சன் தொகை ரூ.9000 ஆக உயர்வு!

மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை பிறகு கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளையுடன் பொங்கல் பண்டிகை முடிவடைய உள்ளது. அதனை தொடர்ந்து நோய் தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் மீண்டும் வரும் வாரம் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இதையடுத்து கட்டுப்பாடுகளை உயர்த்துவது, சில கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA அதிகரிப்பு – சம்பள உயர்வு குறித்த கணக்கீட்டு விவரங்கள் இதோ!

மேலும் பொதுப்போக்குவரத்தில் 70 சதவிகித பயண கட்டுப்பாடு மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என்ற அளவிற்கு மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளது . மருத்துவ நிபுணர்கள் தகவலின் படி தமிழ்நாட்டில் வரும் ஜனவரி இறுதியில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் அடையும். இதனால் அதற்குள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. 4 மாதங்களுக்கு பின் தமிழகத்தில் மீண்டும் 1 லட்சம் வரை பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!