சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய நிலை இது தான்? ரசிகர்கள் ஷாக்!
கடந்த சில ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் தற்போது நிலவும் தலைமைத்துவ குழப்பம், எக்ஸ்-காரணி, பவர்பிளே சிக்கல் உள்ளிட்ட சில பிரச்சனைகள் குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழில் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று பழமொழி சொல்வது போல 2022 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியில் சிங்கத்திற்கு அடி சறுக்கி இருக்கிறது. அதுவும் ஒரு முறை அல்ல 3 முறை. அதாவது, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2022 போட்டிகளில் விளையாடி வரும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. கடந்த மார்ச் 26ம் தேதியன்று இந்த சீசனுக்கான முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதிய CSK, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், பஞ்சாப் கிங்ஸிடம் 54 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. அந்த வகையில் முந்தைய 12 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்திக்காத ஒரு அணிக்கு, இது ஒரு மோசமான தொடக்கமாகும். இப்போது சென்னை அணியின் இந்த தோல்விகள் நிச்சயமாக அவர்களை தொந்தரவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது CSK அணியின் சூழலைப் பொறுத்தவரை, ஐபிஎல் 2021 இல் 45.21 சராசரியில் 633 ரன்களுடன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருந்தார்.
IPL 2022 RR vs RCB: மேட்ச் கணிப்பு – யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
மேலும் ருதுராஜ் கெய்க்வாடுடன் சேர்ந்து சென்னைக்கு சில திடமான தொடக்கங்களை கொடுத்தார். இப்போது ஐபிஎல் ஏலத்தில் CSK அணி அவரை திரும்ப வாங்கத் தவறியதால் பிலிஸிஸ் பாத்திரத்தில் சரியாக பொருந்தக்கூடிய வீரர்கள் அமையவில்லை. ஏனென்றால் அவருக்குப் பதிலாக டெவோன் கான்வேக்கு வாய்ப்பு கொடுக்கப்பட அவர் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து ஐபிஎல் 2021 சீசனில், பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான தீபக் சாஹர் அதிகப்படியான விலையில் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் அவர் CSK அணியில் இன்னும் இணையவில்லை.
இது குறித்த அறிக்கைகளின்படி, இந்த மாத இறுதியில் தான் அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயத்தில் இருந்து மீண்டு வந்ததில் இருந்து அணிக்கான தனது பங்களிப்பை கொடுக்கவில்லை. அந்த வகையில் தீபக் சாஹரின் பவர்பிளே விக்கெட்டுகள் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் நல்ல தொடக்கம் இல்லாத நிலையில் சென்னை அணி கடுமையான சிக்கல்களை உணர்ந்து வருகிறது. சமீப காலங்களில் CSK அணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த விஷயங்கள் இவைகள் தான்.
இப்போது பவர்பிளே ஒரு கவலை என்றால், மிடில் ஓவர்களிலும் CSK அதன் பெருமையை மறைக்கவில்லை. உண்மையில், நடப்பு சாம்பியன்கள் நடுத்தர ஓவர்களில் 7.16 RPO ரன்களை குவித்துள்ளனர். இது அவர்களின் மோசமான தொடக்கத்திற்கு பெரிய காரணங்களில் ஒன்றாகும். தொடர்ந்து ஸ்பின் பற்றி பேசுகையில், ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் முதல் மூன்று போட்டிகளில் எதையும் செய்ய முடியாமல் இருப்பதால், சென்னை அணிக்கு தரமான ஸ்பின்னர் இல்லை. மேலும் X-காரணி CSK அணிக்கு மற்றொரு பிரச்சனையாக இருக்கிறது.
தீபக் சாஹருக்கு மாற்றாக துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகேஷ் சவுத்ரி போன்றவர்களை அணி எடுத்துள்ளது. ஆனால் அவர்களால் எந்த முத்திரையையும் பதிக்க முடியவில்லை. இது தவிர ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவரான எம்எஸ் தோனி போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கேப்டன் பதவியை வழங்குவது சற்று வித்தியாசமானதாக கருதப்பட்டது. அப்படி எம்.எஸ் தோனி தனது வழியில் விஷயங்களை செய்தாலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு நிச்சயமாக நீண்ட பயிற்சிக் காலம் தேவைப்பட்டது.
இப்போது கேப்டன் பதவியை ஒப்படைக்க CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளதால், அதை முழு மனதுடன் செய்ய வேண்டும். ஜடேஜா ஓரிரு தவறுகளைச் செய்வார். அதனால் அவருக்குள் இருக்கும் தலைமை பொறுப்பு வளர அந்த அணி அவருக்கு அதை வழங்க வேண்டும். முதல் மூன்று போட்டிகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் தரவரிசையில் சிவம் துபே முன்னிலை வகிக்கிறார் என்றால், மீதமுள்ள பேட்டர்களும் கொஞ்சம் முன்னேற வேண்டும். இல்லையென்றால் CSK அணி சீக்கிரமாகவே லீக் சுற்றில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் எழுந்திருக்கிறது.