தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 – முதல்வரின் திட்டம் என்ன?
தமிழகம் முழுவதும் கனமழை பெய்த காரணத்தால் பல குடும்பங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ள நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்படுகின்றது.
மழை நிவாரணம்:
தமிழ்கத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மிகவும் மோசமான பாதிப்புகளை மக்கள் மேற்கொண்டனர். மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மழை வெள்ள பாதிப்புகள் உள்ள இடங்களில் நேரடியாக பார்வையிட்டார். அதேபோல், மத்திய அரசின் குழுவும் தமிழக வெள்ள பாதிப்புகளை குறித்து ஆய்வு நடத்தியது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மற்றும் டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.505 மதிப்புள்ள பொங்கல் பரிசு – ஜாக்பாட் அறிவிப்பு!
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் கனமழை காரணமாக கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 24 ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.40,000 நிவாரணமாக வழங்க வேண்டும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 12% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
அத்தியாவசிய காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரசு ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளதால் மழை வெள்ள நிவாரணம் குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.