இப்போதான் முன்னேறுறாரு.. அதுக்குள்ள இப்படி ஒரு சோகம் நடக்கனுமா – விஜய் டிவி ஹீரோக்கு நடந்த கொடுமை!
விஜய் டிவியில் தற்போது படு ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. இந்த தொடரில் நடித்து வரும் நடிகருக்கு தற்போது ஒரு விபரீதம் நேர்ந்துள்ளது.
ராஜா ராணி:
விஜய் டிவி சீரியல்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவ்வாறு ஹிந்தியில் சக்கை போடு போட்ட தியா அவுர் பாதி ஹம் என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் ராஜா ராணி 2. போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியா, அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரின் கணவர் என இந்த சீரியலின் கதைக்களம் நகர்ந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது சந்தியா IPS பயிற்சியில் உள்ளார். இதில் ஒரு சில புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர். அந்த வகையில் இந்த தொடரில் சீரியல் நடிகர் லோகேஷ் பாஸ்கரன் இணைந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வரை மிக ஆக்ட்டிவாக சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்னர் காணாமல் போனார். தற்போது தான் இவர் ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற கதிர் முல்லை, லோனை வசூலித்த சந்தோஷத்தில் கண்ணன் – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மர்ம நபர்கள் இவரது காரின் பின்னால் உடைத்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை களவாடி உள்ளார்களாம். அதனை கண்டுபிடித்து தருமாறு லோகேஷ் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ரசிகர்கள் பலரும் பல நாள் கழித்து உங்களை பார்க்கிறோம்.. அதற்குள் இப்படி ஒரு துயரமா என கமெண்ட்ஸில் புலம்பி வருகின்றனர்.