இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

0
இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!
இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!
இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? அவை சாமானியர்களை எப்படி பாதிக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இவை வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையிலிருந்து வங்கி காசோலை செலுத்தும் முறைகள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு விவரம்:

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் இதற்கு, வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடைய பல சட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மாறப்போகிறது.

Exams Daily Mobile App Download
ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் மாற்றங்கள் என்ன?
  • காசோலை கட்டண முறை: உங்கள் கணக்கு Bank of Baroda (BOB) ல் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகஸ்ட் 1 முதல் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதாவது பேங்க் ஆப் பரோடாவில் (BOB) காசோலை மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் ஐந்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கு நேர்மறையான கட்டண முறையை அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, காசோலை தொடர்பான தகவல்களை எஸ்எம்எஸ், நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப் மூலம் வங்கி வழங்க வேண்டும்.
  • ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி விலை : நாட்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும். இம்முறை 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ரூ.2,177.50ல் இருந்து ரூ.2,141 ஆக குறைந்தது. மேலும் கடந்த மே 19ம் தேதிக்கு பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் கட்ஆப் மதிப்பெண் இல்லையென்றாலும் மருத்துவ படிப்பில் சேர்க்கை – மத்திய அரசு அறிவிப்பு

  • பிரதம மந்திரி கிசானுக்கான KYC: விவசாயிகளின் வசதிக்காக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PMKSNY)க்கான e-KYC க்கான காலக்கெடு மே 31 முதல் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று முதல், KYC தடை செய்யப்படும்.
  • PMFBY க்கான பதிவு: PMFBY க்கு பதிவு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். எனவே பதிவு செய்யத் தவறியவர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க முடியாது. பதிவு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யயப்படலாம்.
  • ஐடிஆர் ரிட்டர்ன் தாக்கல்: 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 கல்வியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆகும். ஆகஸ்ட் 1 முதல் ஐடிஆர்களை தாமதமாக தாக்கல் செய்வதற்கு அபராத கட்டணம் விதிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!