தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினால் என்னென்ன பலன்கள்? முழு விவரம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு முதலிய எந்த பலன்களும் பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய போராடி வருகின்றனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
முழு விவரம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில், 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக 19 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது, என்பது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் விஜயபாலன் கூறியது,
Exams Daily Mobile App Download
- பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நமது பணத்தில் தேவைப்படும்போது கடனாக பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடனுக்கு வட்டி கிடையாது.
- பணி ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் நமக்கு பணத்தை கொடுத்து விட்டார்கள் என்றால் பின்னர் எதுவும் கிடைக்காது.
- ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% தொகை தொடர்ந்து பென்சனாக வழங்கப்படும்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதியத் திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை, பணி ஓய்வு பணிக்கொடை ஆகியவை கிடைக்கும்.
- அரசு ஊழியர் பணியின் போது இறந்து விட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு பின் பணியின் போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை , இறப்பு பணிக்கொடை , பணி ஓய்வு பணிக்கொடை ஆகியவை கிடைக்கும்.
சிமெண்ட் கார்ப்பரேஷனில் Engineering படித்தவர்களுக்கு வேலை – 45+ பணியிடங்கள்..!
- பென்சன் உயர்வு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம் பென்சன் தொகையும் உயரும்.மேலும் மாதாந்திர மருத்துவப் படியாக 300 ரூபாய் கிடைக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் இந்த பணம் கிடைக்காது.
- குடும்ப பாதுகாப்பு நிதியாக 50,000 ரூபாய் கிடைக்கும். மேலும் 80 வயதுக்கு மேல் உயிருடன் இருப்போருக்கு கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 20% முதல் 100% வரை அதிகமாக கிடைக்கும்.