வளைகாப்பு விழாவில் ஆலியா மனசா செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
வளைகாப்பு விழாவில் ஆலியா மனசா செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
வளைகாப்பு விழாவில் ஆலியா மனசா செய்த காரியம் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
வளைகாப்பு விழாவில் ஆலியா மனசா செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆர்யாவிற்கு வளைகாப்பை சஞ்சீவ் நடத்தினார். வளைகாப்பின் போது ஆலியா வெட்கத்துடன் சஞ்ஜீவ்வை கட்டி பிடிக்கும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆலியாவின் வளைகாப்பு:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்கள் நடித்த முதல் சீரியலே இவர்கள் இரண்டு பேருக்கும் மிகப்பெரிய பெயரையும் புகழையும் கொடுத்தது. ரசிகர் மத்தியிலும் இருவரும் பிரபலமாகத் தொடங்கினர். இதற்குப் பிறகு ஆலியா ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஐலா பாப்பா பிறந்து சில மாதங்களிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீசன் 2வில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

பாரதி கண்ணம்மா அருண், செம்பருத்தி ஷபானா நடிப்பில் “கல்யாணம் கல்யாணம்” சீரியல் – விரைவில் தொடக்கம்!

ராஜா ராணி சீசன்2 தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். குழந்தையின் நலனுக்காக கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் கூட தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் நான் மட்டுமே ராஜா ராணி சீசன்2 தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். குழந்தை பிறப்பதற்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பு வரை ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார்.

இரண்டாவது பிரசவத்திற்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

அதற்கு பிறகு பிரசவத்திற்கு செல்ல இருப்பதால் இவருக்கு பதிலாக ரியா என்கிற புதுமுக நடிகை சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமானார். ஐலா பாப்பாவின் பிறந்த நாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கும் வளைகாப்பு நடத்த சஞ்சீவ் பிளான் போட்டிருந்தார். அதன்படி ஆலியாவின் வளைகாப்பு அன்று ஐலா பாப்பாவுக்கும் இரண்டாவது பிறந்தநாள் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி தொடரில் மீண்டும் இணையவில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் படியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது வளைகாப்பு விழாவின்போது சஞ்சீவ்வை ஆலியா கட்டி பிடிக்கும் படியான புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!