TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் வீட்டில் இருந்தே வேலை (WFH) முறை? முழு விவரம் இதோ!
இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகம் வரவழைத்து கொண்டிருக்கும் வேளையில், TCS ’25X25 மாடலை’ வெளியிடுவதாகவும் இதன் மூலம் 25% ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவும் முடிவு செய்துள்ளது.
WHF முறை:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நிலைமை மேம்பட்டு வருவதால், முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலப்பின வேலை முறைக்கு மாறுகின்றன. இதன் மூலம் ஊழியர்களுக்கு தொலைதூரத்திலும், அலுவலகத்திலும் இருந்து வேலை செய்யும் முறைகள் அனுமதிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ’25X25 மாடலை’ வெளியிடுவதாகவும், ஊழியர்களுக்காக அவ்வப்போது இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைப்பதாகவும் கூறி இருக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு – ரூ.20,000/- சம்பளம் !
இது குறித்து TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்கள் ஊழியர்களை வரும் மாதங்களில் மீண்டும் அலுவலகங்களுக்கு அழைக்க இருக்கிறோம். அதற்காக இப்போதிலிருந்து எங்கள் ஊழியர்களை அந்தந்த அலுவலகங்களுக்கு திரும்ப ஊக்குவிக்கத் தொடங்கி இருக்கிறோம். இப்போது, TCS மூத்த நிர்வாக நிலை நிர்வாகிகள் அலுவலகங்களில் இருந்து தொடர்ந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள எங்கள் அலுவலகங்கள் அனைத்து சமூக விலகல் மற்றும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றன’ என்று வீட்டில் இருந்து வேலை (WFH) முறை குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறது.
TCS நிறுவனத்தின் இந்த வேலை முறையில், மொத்த ஊழியர்களில் 25 சதவீதத்திற்கு மேல் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டியதில்லை என்று கூறியுள்ளது. ஆனால், 25/25 மாடலுக்கான முக்கிய பகுதியில், ஊழியர்களை முதலில் அலுவலகங்களுக்கு வரவழைத்து படிப்படியாக கலப்பின வேலை மாதிரிக்கு மாற்றவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, TCS நிறுவனம் இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைத்துள்ளதாகவும் இந்த OOZ ஊழியர்களை நாடு முழுவதும் உள்ள எந்த அலுவலகத்திலும் தங்கள் அமைப்பை செருகவும், உலகளாவிய பணியாளர்களுடன் உடனடியாக இணைக்கவும் அனுமதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதே போல இந்தியாவின் மற்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ், காக்னிசென்ட், எச்.சி.எல் டெக் ஆகியவையும் ஹைப்ரிட் மாடல் வேலைகளை நோக்கி நகர்ந்து, ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு திரும்ப அழைக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் ‘எங்கள் வணிக இயல்புநிலையைப் பேணுவதில் நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறோம். தற்போது, நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மேலும் ஒரு கலப்பின மாடலில் தொடர்ந்து செயல்படுகிறோம்’ என்று HCL செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.