ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி – பெட்ரோல் டீசல் விலையின் எதிரொலி!
இலங்கையில் நிலவி வரும் பெறும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய அந்நாட்டு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அத்தியாவசிய பணிகள் இல்லாமல் பிற வேலைகளை செய்வோர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டில் இருந்தே வேலை:
சீனாவின் உஹான் நகரில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் ஒரு பகுதியாக அலுவலகங்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து ஊழியர்கள் தங்களின் மொபைல் போன், மடிக்கணினி மூலம் இணையத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்து பணிபுரிந்தனர்.
ஜூன் 1 முதல் 30 வரை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு – அரசு திடீர் அறிவிப்பு!
சில மாதங்களுக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நிறுவனமாக தங்கள் ஊழியர்களை அலுவலகம் வர அனுமதி அளித்தனர். தற்போது ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் அத்தியாவசிய பணிகள் இல்லாமல் பிற வேலைகளை செய்வோர் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் உணவுக்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலைவாசியை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்ற விலைகளை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த சூழலில் மக்கள் பெட்ரோல் வாங்குவதை தவிர்க்க அத்தியாவசிய பணி அல்லாத பணிகளில் இருப்போர் வீட்டில் இருந்து பணியாற்ற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.