Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை முடிவு?

0
Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விரைவில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை முடிவு?
Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விரைவில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை முடிவு?
Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை முடிவு?

இந்தியாவில் தற்போது கொரோனா நிலைமை மேம்பட்டு வருவதால், இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வரவழைக்க ஒரு சில கட்டங்கள் வாரியான திட்டத்தை வகுத்துள்ளது.

WFH முடிவு

நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மில்லியன் கணக்கான நிறுவனங்களை வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியது. மேலும் பல நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை தங்கள் வணிக மாதிரிகளின் நிரந்தர அம்சமாக மாற்ற இப்போது தேர்ந்தெடுத்துள்ளன. இருப்பினும், கொரோனா நிலைமை மேம்பட்டு வருவதால், ஐடி நிறுவனங்களில் ஒரு பகுதியினர் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் தனது ஊழியர்களை மீண்டும் பணியிடத்திற்கு அழைப்பதற்காக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

சமீபத்தில் நிறுவனத்தின் 4ம் காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு, இன்ஃபோசிஸின் CFO நிலஞ்சன் ராய், ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்புவதற்கான கட்டம் வாரியான திட்டத்தை விவரித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராய், ‘முதல் கட்டமாக வீட்டு இருப்பிடங்களில் இருப்பவர்கள், டிசியில் (வளர்ச்சி மையம்) இருக்கலாம் அல்லது சொந்த ஊருக்கு அருகில் உள்ள டிசியில் சேரலாம். அந்த வகையில் வாரத்திற்கு இரண்டு முறையாவது அலுவலகம் வருமாறு மக்களை ஊக்குவிக்கிறோம். இரண்டாம் கட்டத்தில், ஊழியர்கள் மீண்டும் மையங்களுக்கு வர முடியுமா என்பதைப் பார்க்க அடுத்த சில மாதங்களில் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

அடுத்ததாக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், நாங்கள் கலப்பின வேலை மாதிரியைப் பார்க்கிறோம். இது வாடிக்கையாளர்கள், ஒழுங்குமுறைச் சூழல் மற்றும் பலவற்றைப் பொறுத்தது ஆகும். எனவே இது ஒரு கட்ட அணுகுமுறையாக இருக்கும்’ என்று விளக்கம் அளித்துள்ளார். இப்போது வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள 3,14,015 ஊழியர்களில், 95 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் 2022-23ம் நிதியாண்டுக்கான 13-15 சதவீத வருவாய் வளர்ச்சிக் கண்ணோட்டத்தை ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில், இன்ஃபோசிஸின் நிகர லாபம் 14.3 சதவீதம் அதிகரித்து ரூ.22,110 கோடியாகவும், வருவாய் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகரித்து ரூ.1,21,641 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!