TCS, HCL Tech & Zomato நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – மீண்டும் வீட்டிலிருந்து தொடரும் வேலை முறை?

0
TCS, HCL Tech & Zomato நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - மீண்டும் வீட்டிலிருந்து தொடரும் வேலை முறை?
TCS, HCL Tech & Zomato நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - மீண்டும் வீட்டிலிருந்து தொடரும் வேலை முறை?
TCS, HCL Tech & Zomato நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – மீண்டும் வீட்டிலிருந்து தொடரும் வேலை முறை?

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை அடுத்து, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அடுத்த சில நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய (WFH) அனுமதி கொடுத்துள்ளது. இது குறித்து Zomato, HCL, TCS நிறுவனங்களின் முடிவு பற்றிய விவரங்களை இப்பதிவில் காணலாம்.

WFH முறை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் முன்பு அறிவிக்கப்பட்ட ‘வீட்டிலிருந்து வேலை’ திட்டத்தை முடிப்பதில் இருந்து பின்வாங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என்றாலும், கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்ததை அடுத்து நிறுவனங்கள் அரசாங்க உத்தரவுகளுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போது நோய்த்தொற்று விகிதம் அதிகரித்துள்ளதால், பல நிறுவனங்களின் ஊழியர்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான ஏர்டெல், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அதன் அனைத்து வசதிகளிலும் கடுமையான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல Zomato ஊழியர்கள் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டிலிருந்து கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக, Zomato இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

ExamsDaily Mobile App Download

இதேபோல், நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லேவும் ஹைப்ரிட் மாடல் வேலைகளை தொடர திட்டமிட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அலுவலகத்திற்கு வருமாறு இந்நிறுவனம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. மறுபுறம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), ’25X25′ மாடலை ஏற்று ஹாட் டெஸ்க்குகளை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இந்த 25X25 மாடல் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், படிப்படியாக ஹைப்ரிட் வேலை மாதிரியாக மாறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாதிரியின்படி, வரும் 2025ம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் ஊழியர்களில் 25 சதவீதத்திற்கு மேல் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்பதால், ஹைப்ரிட் முறையில் தொடர்ந்து செயல்படும் என்று HCL தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் ஒரே நாளில் 2,451 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4,30,52,425 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!