TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த முக்கிய தகவல்!

0
TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - WFH குறித்த முக்கிய தகவல்!
TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - WFH குறித்த முக்கிய தகவல்!
TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த முக்கிய தகவல்!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் , இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடல் வேலைகளை தேர்வு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WFH திட்டங்கள்:

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. இன்னும் இந்த வைரஸ் தொற்றிலுருந்து நாம் முழுமையாக மீண்டு வரவில்லை. இதன் அடிப்படையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 16,103 கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளன மற்றும் 31 இறப்புகள் ஏற்பட்டு உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்தது.

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்த உத்தரவின் பேரில், பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறி, பல IT நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால் இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட IT நிறுவனமான Synopsys நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டதால், அந்த நிறுவனம் ஊழியர்களை தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை செய்யவே அனுமதித்துள்ளது. மேலும் Paytm நிறுவனம் சமீபத்தில் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்ய அனுமதித்தது.

மேலும் TCS, HCL, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் போது, ஹைப்ரிட் மாடல் வேலைகளைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு அழைக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே ஊழியர்களை அலுவலகத்திற்கு நேரில் வருமாறு நிறுவனம் ஊக்குவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து TCS இன் 25-25 மாடல், மக்களை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், படிப்படியாக ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை தொடர்ந்து ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு நிறுவனத்தின் முதன்மையான முன்னுரிமைகள் என்பதால், ஹைபிரிட் முறையில் தொடர்ந்து செயல்படும் என்றும், “எங்கள் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று, பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகும். நாங்கள் எங்கள் வணிக இயல்பு நிலையை பராமரிப்பதில் ஆழ்ந்த உறுதியுடன் இருக்கிறோம், அதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவைகளை உறுதி செய்கிறோம் என HCL தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!