இந்திய IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த நிலை இதுதான்? முழு விவரம் இதோ!
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் எழுச்சி கண்டுள்ள நிலையில் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் WFH முறை தொடருமா என்பது இப்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
WFH முறை
இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது கொரோனா பேரலைத்தொற்று பாதிப்பால் சீனாவில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு மாற்றியுள்ளது. இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா புதிய பாதிப்புகள் தற்போது ஆயிரத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3200 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – முழு விபரம் இதோ!
இந்த நிலையில் நாட்டின் முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக வீடுகளில் இருந்து பணிபுரியும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இப்போது ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் சில நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், ஊழியர்களை அழைப்பதற்கான இறுதி முடிவை எடுக்க அரசாங்க நடவடிக்கைகளுக்காக காத்திருக்கின்றன. அதே வேளையில், டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய முன்னணி IT நிறுவனங்கள் இப்போது கலப்பின முறைக்கு மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் இந்த நிறுவனங்களில் 100% WFH முறை இருக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. தவிர, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஹைப்ரிட் மாடலில் அலுவலகங்களை இயக்க முடிவு செய்துள்ளது.