ஷாக் நியூஸ்.. ஆசிரியர் தேர்வில் நடந்த மாபெரும் ஊழல் – 21,000 பேருக்கு சட்ட விரோதமாக வேலைவாய்ப்பு!
மாநிலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது. இது தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்றை சிபிஐ வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பல கோடிக்கணக்கான ஆசிரியர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை CBI,SIT துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவில் புதிய தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து தற்போது, இந்த வழக்கு விசாரணையின் போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 21,000 விண்ணப்பதாரர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் இதில் 9000-க்கும் மேற்பட்ட OMR தாள்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் Hard Disc-களை மீட்டெடுப்பதன் மூலமாக OMR தாள்களில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது இந்த ஊழல் விவகாரத்தின் இறுதி கட்ட விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த ஊழல் விவகாரத்தில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க கூடாது .என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.