மதுக்கடைகள் தினசரி 3 மணிநேரம் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (ஜூன் 1) தொடங்கி மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தினசரி 3 மணி நேரத்திற்கு மதுபானம் விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் திறப்பு:
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் முழு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்து இயங்கும் மதுபான கடைகள் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் – மலேஷியா அரசு அறிவிப்பு!
முன்னதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் ஜூன் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக மளிகை கடைகள் மற்றும் பிற அத்தியாவசிய கடைகள் இயங்குவதற்கு காலை 7 மணி முதல் 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் மேற்குவங்கத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் கொல்கத்தாவில் இயங்கி வரும் 1,500 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மற்றும் 350 பார்கள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மேற்கு வங்கத்தில் 7,000 க்கும் அதிகமான மதுபான கடைகள் செயல்பாட்டிற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தினசரி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை மதுக்கடைகள் இயங்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.