மாநிலம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!!
மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலின் கடைசி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பகுதி நேர ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கும், பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் மத்தியில் கொரோனா நோய்த்தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக 8 வது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பி.ஜி செமஸ்டர் அட்டவணை 2021
இதை தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பால் மேற்கு வங்கத்தில் பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கின் போது மார்கெட்டுகள் அடுத்த 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். தொடர்ந்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், மளிகை கடைகள், அழகு நிலையங்கள், விளையாட்டு கூடங்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் மார்கெட்டுகள் செயல்படும்.
TN Job “FB Group” Join Now
தவிர உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். உணவகங்களில் ஆன்லைன் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அம்மாநில அரசு முன்னதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,13,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.